தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டு பயணத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தை யாராலும் மறக்க முடியாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் இதயமே ஒரு காலத்தில் ஏ.வி.எம். தான் என்று இருந்து வந்தது. பல வெற்றி படங்களை கொடுத்த இந்நிறுவனம் பல வருடமாக படங்கள் தயாரிப்பதையே நிறுத்தியது.

தற்போது, இயக்குனர் ஹரியும், நடிகர் சூர்யாவும், ஏ.வி.எம். நிறுவனத்துடன் இணையும் படத்திற்கு ‘யானை’ என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த காலம் முதல் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஏ.வி.எம். போன்ற சில ஸ்டூடியோக்களான ஜெமினி, விஜயா வாகினி போன்ற ஸ்டுடீயோக்கள் எல்லாம் எப்போதோ மூடு விழாக்கள் கண்டுவிட்டது. ஆனால், ஏ.வி. எம். ஸ்டுடியோ மட்டும் இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரிக்காமல் அரங்கு வாடகை, பாடல் ரெக்கார்டிங் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தது. தற்போதைய வியாபாரப் போட்டியால் அவர்கள் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். ஆனால் இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளனர்.

வெற்றிக் கூட்டணியான நடிகர் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’ படத்தை ஏ.வி.எம். தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யா ஏ.வி,எம் கூட்டணியில் உருவான அயன் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.