அரசு அலுவலகங்களில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது, செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப்பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசுக்கு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதை உறுதிப்படுத்திய தலைமைச்செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், குறிப்பாக தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே செயற்கை காலிப்பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதை தவிர்ப்பதோடு, தற்காலிக பதவி உயர்வு வழங்குதலையும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்டகால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நடைமுறையில் விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.