இந்தியா அருகே இமயமலை சாரலில் உள்ள அழகிய நாடு நேபாளம். இதுவரை இந்த நாடு எரி பொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது.வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்திய துறை முகங்களை பயன்படுத்தி வந்தது. இது போன்று அனைத்து தேவைகளுக்கும் இந்தியாவை சார்ந்தே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் அங்கு எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பல மாதங்கள் கடும் தட்டுப்பாடு நிலவியது.

அதை தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நேபாளம் நாடியது. அதன் பின்னர் 2 நாடுகளும் நட்புறவு கொள்ள தொடங்கின. இந்த நிலையில் நேபாளமும், சீனாவும் வர்த்தகரீதியில் உறவை விரிவுபடுத்த முடிவு செய்தன.

அதுகுறித்து 2 நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.

அதே நேரத்தில் நேபாளம் தன்னிடம் உள்ள லாங்ஷூ, லாசா மற்றும் ஸஸிகாட்ஸ் பகுதியில் சாலைகளை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் நடைமுறைக்கு வருகிறது.

இது நேபாள வரலாற்றில் முக்கிய மைல்கல் என அந்நாட்டு வர்த்தக மந்திரி ரா ‌ஷங்கர் சஞ்சு தெரிவித்துள்ளார். இந்தியா 2 துறை முகங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியது. ஆனால் சீனா 4 துறைமுகங்களை வழங்கி உள்ளது.

இதன் மூலம் ஜப்பான், தென்கொரியா, மற்றும் வடக்கு ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப முடியும், செலவும், பயண நேரமும் மிக்சமாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப 3 மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இது அணடை நாடு மாலைத்தீவு தொடர்ந்து மத்திய மோடி அரசின் தொலைநோக்கு இல்லா பார்வை காராணமாக மற்றோரு சறுக்கல் என்று சர்வதேசநிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்கள்