நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 2 முறை வெடி விபத்தில் மொத்தம் 11 பேர் இதுவரை உயிரிழந்தது அதிர்ச்சியளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC அனல் மின் நிலையம் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. என்.எல்.சி. 2ஆம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், NLC 2வது அனல் மின் நிலையத்தின் 5ஆவது அலகில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. கொதிகலன் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக் குழாய் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானதில், தொழிலாளார்கள் 17 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து சிலர் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் வாசிக்க: நீதிபதியை மிரட்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

இதனிடையே, சம்பவ இடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், விபத்து தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன், நெய்வேலி அனல் மின் நிலைய