பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்னின் புதிய அமைச்சரவையில், அமைச்சராக பதவியேற்ற முதல் திராவிட பிராந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்.

நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில் இரண்டாவது முறை எம்பியாக தேர்வாகியுள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். நியூசிலாந்து அமைச்சரவையில் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக பதவியேற்றார்.

இந்தியாவின் கேரள மாநிலம் பரவூரை பூர்வீகமாக் கொண்ட பிரியங்கா சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் என்பதும், நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ரிச்சர்ட்சன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

இவரது தாத்தா கேரள இடதுசாரி கட்சியில் இருந்தவர் என்பதும் கேரள மாநில பிரிவின் போது முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

ஆக்லாந்தில் தனது தொகுதி மக்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த அறிவிப்பு வந்திருப்பது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் தேர்தல் பிரசார கூட்டத்தினால் கொரோனாவுக்கு 700 பேர் பலி, 30,000 பேர் பாதிப்பு: பகீர் தகவல்