திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பரப்புரை குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
 
மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழு அமைத்துள்ளது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
 
பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. ஊடக ஒருங்கிணைப்புக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி தலைமையில் தேர்தல் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.