நகர் மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள வரைவாளர் கிரேடு III பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: வரைவாளர் கிரேடு III – 53

சம்பளம்: மாதம் ரூ.35,400 – ரூ.1,12,400

தகுதி: Diploma in Civil Engineering, Diploma in Architectural Assistantship தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கட்டிடத் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Post Diploma in Town and Country Planning தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150 மற்றும் ஒன்டைம் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்பத்தூர்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2811.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…