தேவைப்பட்டால் தனது ஆன்மாவையும் விற்பார் கெஜ்ரிவால்; பஞ்சாப் முதல்வர் ஆவேசம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விமரிசித்து உள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையொட்டி டெல்லியில் வெளி மாநிலப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் … Continue reading தேவைப்பட்டால் தனது ஆன்மாவையும் விற்பார் கெஜ்ரிவால்; பஞ்சாப் முதல்வர் ஆவேசம்