புது தில்லியில் உள்ள கைரா எனும் பகுதியில் கார்பரேஷன் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணியளவில் முகமுடி அணிந்த நிலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 6 பேர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

வங்கிக் காவலரிடமிருந்த துப்பாக்கியையும் பிடுங்கிக் கொண்டனர். மேலும் வங்கியில் இருந்தவர்களை மிரட்டினர். இதில் கணக்காளர் சந்தோஷ் குமார் (25) என்பவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், பட்ட பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகள் வெளியாகின. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.