பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவேண்டும், சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் வாசிக்க: ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசு

இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றுவரை பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.