தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால், அப்பாவின் பெயரையோ அல்லது அப்பாவின் குடும்பப் பெயரையோ சேர்த்துக்கொள்வது வழக்கம். பெயருக்கு முன்னால் போடப்படுகிற இனிஷியலும் அப்பாவுடைய பெயரின் முதல் எழுத்தாகத் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில், தன் மகள் தன்னுடைய குடும்பப் பெயரைத் தான் (surname) அவளுடைய பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் சிக்கல்கள் நேருமா என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார் மனுதாரர்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவரது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்ந்த விவகாரங்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? என கேட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி ரேகா பாலி, “ஒரு குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்” என தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமி; தலைநகர் டெல்லியில் நடந்தேறிய அவலம்