ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் பள்ளியொன்றில் எடுக்கப்பட்ட வீடியோ, கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக நிற்க வைத்து நிர்வாகம் தண்டித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
 
மாணவர்கள் 9-10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் கல்வித்துறை அதிகாரி இச்சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
குழந்தைகள் நல ஆர்வலர் அச்சுயாத் ராவ் பேசுகையில், “இவ்விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என கூறியுள்ளார்.
இதை ஏற்று கொண்ட ஆந்திர அரசும் அந்த பள்ளியின் உரிமைத்தை ரத்து செய்து அந்த பள்ளியின் உரிமையாளர் நாகராஜன் நாயுடுவை கைது செய்துள்ளதி