தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன், தற்போது பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் நடிகர் விஷால். துணை தலைவர் பொறுப்பை நடிகரும், இயக்குனருமாஞான பார்த்திபன், பிரகாஷ்ராஜ் வகித்து வருகின்றனர். செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பார்த்திபன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார். ஏன் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை அதில் குறிப்பிடவில்லை.

இளையராஜா 75 நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது மற்றும் பார்த்திபன் பதவி ஏற்று ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், இன்று தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.