ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
 
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ பயன்பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் நேற்று இரவு சரியாக 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 34 கிராம் எடையில் ‘கலாம்சாட்’ என்ற தமிழ் நாட்டு மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைகோள்கள், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.