தமிழக அரசின் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: செவிலியர் (Nurses -Sick Newborn Care Unit) – 520

தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், இதர அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MEDICAL SERVICES RECRUITMENT BOARD) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வேலை வாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…