தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் டெல்லியில் பாஜக அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் சுமார் 75% ஒப்பந்தங்களை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்ட 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி-யும், நாகை மாவட்டம் கமலாபுரம் உள்ளிட்ட 2 இடங்களில் வேதாந்தா குழுமமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளன. மேலும் கோதாவரி படுகையிலும் கச்சா எண்ணெய் எடுக்க வேதாந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பின்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் காவிரியை ஒட்டிய கடல் பகுதியில் இருந்துதான் ஹைட்ரோ கார்பனை எடுப்போம் . ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் . தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது. என கூறினார்.

ப்போது ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்ற வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கூறினார்.