தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 12) 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு 6,61,264-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,07,203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,165 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மேலும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை 10,314-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1212 பேருக்கு கொரோனா உறுதியாகி, மொத்தம் 183251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 84,02,994 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,162 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 43,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,99,382 பேர் ஆண்கள் மற்றும் 2,61,850 பேர் பெண்கள் மற்றும் 32 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: செல்போன், ரூபாய் நோட்டுகளில் இத்தனை நாட்கள் உயிர் வாழுமா கொரோனா – அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்