தென் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கரூர், மதுரை மற்றும் தருமபுரி ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.