தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
 
இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
 
இறுதி நாளான செவ்வாய்க்கிழமை முதல்வர் பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர், நாகப்பட்டினத்திலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையிலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சென்னையிலும் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
 
ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
 
மே 19-ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின், இரண்டாவது கட்ட தேர்தல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
 
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
 
திரிபுராவில் வியாழக்கிழமை நடைபெற இருந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநிலத்தில் ஆளும் அதிமுக இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன.
 
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த முறை திமுக தேர்தலை எதிர்கொள்கிறது. முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் பங்கெடுக்கிறது.
 
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
 
தமிழகத்தில் இது வரை ரூ.127 கோடி ரொக்கமும், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களையும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அங்குள்ள 35 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஹின்ஜிலி, பிஜேபூர் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
 
இந்த மாநிலத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல் முறையே 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
 
அஸ்ஸாமில் இரண்டாவது கட்டமாக 5 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது., காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களாக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
 
மத்திய அமைச்சர்களான ஜூவல் ஓரம், சதானந்த கௌடா, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெ கௌடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, ராஜ் பப்பர், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பாஜக எம்.பி.யான ஹேமமாலினி, திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் தேர்தலில் கவனம் ஈர்க்கும் வேட்பாளர்களாக உள்ளனர்.
 
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கான் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது ..
 
 
வேலூர் தேர்தல் ரத்து ..கனிமொழி வீட்டில் வருமான வரிச் சோதனை..தேனி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு என எதிர் கட்சிகளை மட்டும் குறி வைத்து வேட்டையாடி வரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின்..
 
திமுகவின் மீது களங்கம் ஏற்படுத்தவே தேர்தல் ஆணையத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஸ்டாலின் திருச்சியில் பேட்டியளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
 
தமிழகத்தில் 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தேர்தலுக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
 
இதை தொடந்து சுமார் 65000 EVMக்க்ள் பாதுக்காக்கப்பட்டு 35 நாட்கள் கழித்து மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
 
அதிக நாட்கள் பாதுகாக்கப்படுவதால் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 50% VVPAT எண்ண வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்த தேர்தல் ஆணையம் வெறும் 2% VVPAT மட்டும் எண்ண் போவாதாக அறிவித்து உள்ளதும் , 50% எண்ண் மறுத்த தேர்தல் ஆணையத்தை ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு எதிர்த்து வருவதும் குறிப்பிட தக்கது