பாஜக தலைவர் தூத்துக்குடி விமான நிலையம் சென்றபோது அங்கு அவரிடம் சோபியா என்ற இளம் பெண் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற கூறியதை கேட்ட தமிழசை சொள்ந்தராஜன் ஆவேசம் அடைந்து ஆடி தீர்த்த கட்சி சமூகதளத்தில் வைரலாகி வருகிறது

பாஜக தலைவரை போலிசார் கட்டுப்படுத்த முயன்றும் அவர் அமைதி அடையாமல் அவரும் அவர் பாஜக  கட்சி பிரமுகர்களும் போட்ட கூச்சலால் சகபயணிகள் முகம் சுழித்தனர் என்று காட்சியை நேரிடையாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்

பிஜேபி தலைவர் தமிழிசை எதிரில் பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடி கிருஷ்ணசாமி என்பவரின் மகள் சோபியாவை மூன்று பிரிவுகளில் கைது செய்துள்ளது அதிமுக அரசு..

கைது செய்யப்பட்ட சோபியா கனடாவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படிப்பவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வரும்போது இந்த சம்பவம் நடந்து உள்ளது

கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தை டாக்டர். கிருஷ்ணசாமி பிஜேபி தலைவர் தமிழிசை மற்றும் மிரட்டிய பத்து பிஜேபியினர் மீது கொலை மிரட்டல் புகாரும் அளித்துள்ளார் ஆனால் இந்த புகாரில் மீது எந்த நடவடிக்கையும் இது வரைக்கும் இல்லை.

இந்நிலையில் பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிராக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாஜக ஒழிக என்று சொல்பவர்களையெல்லாம் கைது செய்வீர்களா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.