ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என எலான் மஸ்க்கை டேக் செய்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.

அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில், “எனது ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19 ஆம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.