மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் திரைப்பட நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடிகர் சிவகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார்,அந்த இளைஞரின் கையில் இருந்த மொபைலை பட்டென தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த விடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் யோகா கற்றுத்தேர்ந்த ஒருவர் இவ்வாறு அமைதி காக்காமல் நடப்பதா ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்பது போன்ற பல்வேற் விமர்சனங்களும் சமூகவலைதளத்தில் முன்வைக்கப்படுகின்றன.

முன்னதாக பாடகர் யேசுதாசும் இதை போலவே செல்ஃபி எடுத்த ரசிகரிடம் முரட்டுதனமாக நடந்து கொண்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடதக்கது