சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு ரூ .100 அபராதம் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தமிழத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டமான சென்னை, கொரோனாவின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சதத்தை தாண்டுவதால் அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1082 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 176 பெருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..மருத்துவர் பிரதீபா மரணத்தில் சர்ச்சை

தற்போது சூழலில் சென்னையில் முக்கிய கவனம் செலுத்தியுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதன்படி, இனி வரும் நாட்களில் சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதிகளை மீறும் கடைகள், நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தனி மனித இடைவெளி இரு நபர்களுடக்கிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள மாநகராட்சி, பணியில் இருப்பவர்களும், வெளியில் செல்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.