மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின், ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ்குமார் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட பிரிவுக்கு எதிராகவும் இத்திருத்தம் இருப்பதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு,

சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (EIA 2020) சட்ட திருத்தும் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

70% வேகமாக பரவும் புதிய திரிபு கொரோனா வைரஸ்; அலறும் பிரிட்டன் அரசு