பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் மகத், கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிட்டிப்பு கடந்த 17ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில நாட்கள் பிரேக் விடப்பட்டது. அந்த இடைவெளியில் பிக் பாஸ் பிரபலங்களுடன் இணைந்து தான் நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார் சிம்பு.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகி பாபு. விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் 13வது படம் என முன்னனி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். விஜய், அஜித் தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாகி இருக்கிறது.