சிலை கடத்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், மாநில காவல்துறை மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர், ஒரு ஆண்டாக பொன். மாணிக்கவேல் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணைத் தகவல்களையும் தடுப்புப் பிரிவு தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? என்று அரசிடம் கேள்வி எழுப்பினர்.

பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கலைக்க உள்ளோம் என்றும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பணியில் எங்களுக்கு திருப்தியில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தன்னிடம் இருக்கும் ஆவணங்களை வாங்கவே அரசுக்கு ஆர்வம் இல்லை என்றும், யார் யாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது உள்ளிட்ட விசாரணை தகவல்களில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

தமிழக அரசு போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்றால், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில், இன்று அரசு சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமூக வளைதளத்திலே பாஜக பொது செயலாளர் ராஜாவை நெருங்கி விட்டதால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஐ விடுவிக்க செய்யும் ராஜ தந்திரமாக இப்படி ஒரு முடிவை அதிமுக அரசை மத்திய அரசு நிர்பதிக்கிறது என்ற பதிவுகளும் வருகிறது.

தொடர்பு செய்திகள் : சிலைகள் மாயமாவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு