சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலே சுமார் 28 லட்சம் பேர்  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் . சிபிஎஸ்இ பிளஸ் 2 சுமார் 12 லட்சம் பேர்  தேர்வு எழுதுகிறார்கள் .. 
 
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ)பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கும்.
 
ஆனால், இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கவுள்ளன.
 
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்.15-ஆம் தேதி தொடங்கி ஏப்.3-ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.21-இல் தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.