உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாா் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்த பாடகி சின்மயி கோாியிருந்த அனுமதிக்கு காவல்துறை மறுப்பு தொிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற முன்னாள் பணிப்பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்தாா். இந்த புகாரை தொடா்ந்து அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இது குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டாா். மேலும் இந்த குழு ரகசியமாக விசாரணை நடத்தும் என்றும் தொிவிக்கப்பட்டது.

நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோா் இடம் பெற்றிருந்தனா். பின்னா் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை என்று தொிவித்து ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என்று நீதிபதிகள் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து பெண்கள் பாதுகாப்பு தொடா்பான அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் கடிதம் கொடுத்திருந்தாா்.

அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியா் கொடுத்துள்ள பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, மே 12ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 3.30 மணிக்கு போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

சின்மயின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தொிவித்துள்ளது.