முன்னாள் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் சொன்னது போல.. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக்கும்.. மத்திய வகுப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக ஆக்கி கொண்டிருக்கும் ஒரு காரணத்திற்காகவே பாஜக அரசு எல்லா மாநிலத்திலும் தூக்கி எறியப்பட வேண்டாமா..

மாநிலங்களில் இருந்து மக்களின் வேர்வையில் உறிஞ்சி எடுக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பாக்கியை கூட மாநில அரசுகளுக்கு தராமல் அதை கடனாக அதுவும் வட்டி போட்டு சிறுக சிறுக தந்து கொண்டிருக்கிறார்கள்..

லாபமில்லாத நிறுவனம், லாபம் தரும் நிறுவனம் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து அரசு பொது நிறுவனம் எல்லாவற்றையும் விற்று தின்கிறார்கள் வெட்கம் எதுவுமில்லாமல்..

இவர்கள் கட்டமைத்த அதானி அம்பானி மட்டுமே பணக்காரர்கள் ஆக்கும் பொருளாதாரம் தான் இந்தியாவின் தற்போதைய மையப் பிரச்சனை.. இதன் காரணமாக பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்திருக்கிறது என்றால் இதனை மறுக்கமுடியுமா..

ஹிமாலயா சாமியார் என்கிறார்கள்.. NSE தலைவியுடன் ஊடல் என்கிறார்கள்.. Seychelles வெளிநாட்டில் மார்ச் 2015 ஆம் ஆண்டு கூடல் என்கிறார்கள்.. ஹிமாலய சாமியார் அங்கம் அங்கமாக தலைவியை வர்ணிக்கிறார்.. எல்லாமே விசாரணையில் அம்பலப்பட்டு நிற்கிறது..

ஆனாலும் விந்தை விசித்திரம் காதும் காதும் வைத்ததுபோல ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை மறைத்து விட்டு 3 கோடி அபராதம் போட்டுக்கொண்டு முடித்துவிடுகிறார்கள் பிரச்சனையை..

மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி மார்ச் மாதம் அதே வருடம் அந்தத் தீவில் அங்கு இருந்தாரே என்றால் நம்மைப் பார்த்து விகாரமாக சிரித்தபடியே ஜெய்ஸ்ரீராம் சொல்லு என்கிறார்கள்..

யார் அந்த ஹிமாலயா சாமியார்.. ஏன் வர்த்தக சந்தையை சீர்குலைத்த சித்ரா மீது கிரிமினல் வழக்குகள் இல்லை என்ற கேள்விகளுக்கு விடையும் இல்லை..

5000 சதுர கிலோ மீட்டருக்கு மேலே சீனா ஆக்கிரமித்த நிலையிலும் அருணாச்சல பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதைப்பற்றி பேச வக்கில்லாமல்..

பொருளாதார சீர்குலைவு மறைக்கத்தான்.. அண்டை நாடுகளில் சிதைந்த நட்புறவை மறைக்கத்தான் ..
மதமாற்றம் என்கிறார்கள்..
ஹிஜாப் தடை என்கிறார்கள்..
பாகிஸ்தான் என்கிறார்கள்..

கொடூர சித்திக்கு 20 லட்சம் அள்ளித் தருகிறார்கள்.. #Justiceforlavanaya என கதறுகிறார்கள்.. அதே தமிழ்நாட்டில் ஆஸ்ரமத்தில் ஹிந்து சாமியார் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஹிந்து மாணவிக்கு வாயை திறக்க மறுக்கிறார்கள்.. #justiceforhemamalini என்று மருந்துக்குக்கூட முணுமுணுக்க மறுக்கிறார்கள்..

ஹிந்து வீட்டின் முன் சிறுநீர் கழித்தவனுக்கு எய்ம்ஸ் உறுப்பினர் உயர்பதவி.. நீதிபதிகள் சினிமா காட்சியை மேற்கோள்காட்டி நீதி வழங்கும் அவலத்தை நம்மை காண வைத்துள்ளார்கள்.. படுபாவிகள் திருந்த போவதில்லை.. மதத்தை கட்டிக்கொண்டு அழும் கேடுகெட்ட கேவலமான மிருகங்கள்..

கிறிஸ்தவ மிஷனரிகளும் முஸ்லிம் மத சார் இயக்கங்களும் கட்டிய ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி சாலைகளை காட்ட முடியும்..

ஆர்எஸ்எஸ் மக்களுக்காக கட்டிய ஒரு இலவச ஆஸ்பத்திரியை காட்ட முடியுமா.. ஆர்எஸ்எஸ் மக்களுக்காக கட்டிய ஒரு இலவச கல்லூரியை காட்ட முடியுமா.. காந்தியைக் கொன்றவர்கள்.. காமராஜரை கொல்ல முயன்றவர்கள்..

இன்றைக்கு தமிழ்நாடு முதல்வர் வீட்டுக்கு பின்புறமாக நுழைய 30 பேரை தயார் கொண்டு செய்து வருகிறார்கள் என்றால் இவர்கள் சொல்ல வருவதுதான் என்ன.. அப்படி கொடூர எண்ணத்துடன் செயல்பட்டவர்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சமடைந்து மஞ்சத்தில் தென்றலை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..

உத்திரப் பிரதேசம் அகிலேஷ் வெற்றி பெரும் திருப்புமுனையாக அமைய போவதாக வடக்கிலிருந்து வரும் செய்திகள் வசந்தத்தை தருகிறது.. பாஜகவின் தோல்வி என்பது இந்தியாவின் வெற்றி.. இந்தியாவின் வெற்றியை நோக்கி காத்திருப்போம்..

உள்ளாட்சியில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கலாம் தவறில்லை. ஆனால் பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெற்றால் அது சகிக்கமுடியாத அவமானச் சின்னம் என்றால் அதை மறுக்கவும் முடியாது..

எட்டு வருடமாக இந்தியாவை ஆண்டும், 17 மாநிலத்தில் ஆட்சியை ஜனநாயகத்தை காற்றில் பறக்கவிட்டு ஆட்சியை பிடித்தும்.. நேருவை தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை.. நாமாவது சிந்தித்து ஓட்டுப் போடுவோம்..

https://www.facebook.com/savenra/posts/7968781359814384