சாலைகள் எப்படி உள்ளது, எங்கெல்லாம் குழிகள் உள்ளது என்பதைக் கண்டறிய இண்டெண்ட்ஸ் கோ (intents go) செயலி கோவை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் கட்டமைப்பு பணிகள் என மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும் பணிகள் காரணமாகச் சாலைகள் பெரும்பாலும் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இந்த சாலைகளில் நடந்து செல்வதே கடினமான காரியமாக உள்ளது.

சாலைகளில் உள்ள பள்ளங்களே விபத்துகளை ஏற்படுத்தி, பல உயிர்களைப் பறிக்கவும் செய்கிறது. இனி இந்த சாலைகளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்ற கவலை வேண்டாம். சாலைகள் எப்படி உள்ளது, எங்கெல்லாம் குழிகள் உள்ளது என்பதைக் கண்டறிய ஆப் ஒன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்திள்ளது.

இந்த ஆப்பை குர்க்கானை சேர்ந்த இண்டெண்ட்ஸ் மொபி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் உதவியுடன் கோவை மாநகரில் மோசமான சாலைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

இண்டெண்ட்ஸ் கோ (intents go) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பை தரவிறக்கம் செய்துவிட்டால், அது செல்போனில் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த ஆப்பை வைத்திருப்பவர்கள் வாகனத்தில் செல்லும் போது, ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு வேகத்தடை, பள்ளம், மேடு உள்ளிட்டவற்றின் தரவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்கிறது.

இந்த தரவுகளைக் கொண்டு ஆப் வைத்திருக்கும் பிறரையும் எச்சரித்து, வாகனத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது. குறிப்பிட்ட தரவுகளின் உதவியோடு ஆப் வைத்திருக்கும் நபருக்கு 200 மீட்டாருக்கு முன்பாகவே எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாகக் கோவை மாவட்டத்தில் உள்ள குருடாம்பாளையம், பீளமேடு, எஸ்.எஸ் குளம் பகுதியில் உள்ள தரவுகளை இந்த ஆப் சேகரித்து, தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்த ஆப்பை திறந்து வைக்க வேண்டும் என்ற அவசியமேதுமில்லை என இதன் தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆப்-பில் தெருவிளக்கு எரிகிறதா, சாலையின் அகலம் எவ்வளவு என விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நிறுவனத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா.. ஆதாரம் கேட்டு 600 விஞ்ஞானிகள் கடிதம்