நடிகர் சாந்தனு அடுத்ததாக “இராவண கோட்டம்” என்ற படத்தில் நடிக்கும் நிலையில், இந்த பட அறிவிப்பை பார்த்த நடிகர் விஜய், சாந்தனுவுக்கு வாழ்த்து அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கதிர், ஓவியா நடித்திருந்த மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கு இராவண கோட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துக்கள் நண்பா! டைட்டில் செம! என்று விஜய் வாழ்த்தியுள்ளதாகவும், இந்த ஒரே ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே. விஜய்யின் வாழ்த்தால் மெர்சலான நடிகர் சாந்தனு அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.