சபரிமலை ஐயப்பன் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து பெண்களுக்கும் அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து வரும் அக்ட் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கேரளா அரசு அறிவித்தது இதற்கு சில ஹிந்து தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, “சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும்” என்று ஆவேசத்துடன் பேசினார்.

தமிழில் அருள். சாமுராய் உள்ளிட்ட படங்களில் நடித்த கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதற்கு பெயர் போனவர் கொல்லம் துளசி. முன்னதாக கடந்த வாரம் அவரிடம் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் திலீப் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு மீடியா இதை ஊதிப் பெரிதாக்கிவிட்டது, நாட்டில் பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது எனக் பாலியலை ஆதரித்து வகையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.