தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது.

இதனால் தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார். தெலுங்கானாவில் மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்துவிடுவோம் என சந்திரசேகர் ராவ் நம்பிக்கையுடன் உள்ளார். அங்கு முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும் சவால் விடுத்துள்ளார்.

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இப்போது அங்கு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் காங்கிரசுடன் கூட்டணியை அமைத்துள்ளது.இதனால் சந்திரசேகர்ராவ் கட்சியினரும் பாஜகவும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளது. இன்று மாலையில் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினார்கள், அப்போது மாநிலத்தில் சட்டசபையை கலைக்க வேண்டும், ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் முதல்வராக தொடர்ந்தால் உண்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைபெறாது, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செல்வோம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பாரா சந்திரசேகர்ராவ் அதிர்ச்சியில் முழகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ..