சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. 

விசாரணையின்போது பதில் கூற முடியாமல் சசிகலா பல முறை திணறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.