தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளின் குத்தகை விவரங்கள் மற்றும் குத்தகைதாரர் விவரங்களையும் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கோயில் அறக்கட்டளை சொத்து குத்தகைதாரர்கள் விவரத்தையும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்ட்டுள்ள விவரங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துகளை மீட்க 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது