மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை மற்றும் பணத்தை  கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் டிரைவர் கனகராஜ் , தனது மனைவி , 3 வயது குழந்தை  உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று  ஷயான் நேற்று முன்தினம் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.
 
மேலும், கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல சன் டிவி குழுமம்  பின்வரு கேள்விகளை எழுப்பி இருந்தது . மேலும் திமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜாவும்  எடப்பாடி பழனிசாமி காவல்துறையை அதிமுகவின் உள்ள வேறு யாராவது ஒருவருக்கு தந்து விட்டு வழக்கை சந்திக்கலாம் என கூறி இருந்தது குறிப்பிடதக்கது  
 
 
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் பேரில், பேட்டியளித்த  ஷயான், டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், மற்றொரு குற்றவாளி மனோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்நிலையில், மேத்யூசை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். சயனை பிடிக்கவும் கேரளா சென்றனர்.  கோடநாடு வீடியோ விவகார வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்ப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.
 
முன்னதாக டெல்லியில் தங்கி இருந்த சயன் மற்றும் மனோஜ் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் 2 பேரும் கடத்தப்பட்டதாக மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.
 
சற்றுமுன்பு வரை சயனுடன் தான் பேசிக் கொண்டு இருந்ததாக மேத்யூ தகவல் தெரிவித்தார். துவாரகா விடுதியில் இருந்து தான் வந்த சில நிமிடங்களில் 2 பேரும் கடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் 
பட ஆதாரம் : நன்றி சன்டிவி