சில நாள்களுக்கு முன்பு கொரோனாவைக் குணப்படுத்தும் அப்பளத்தை அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஜல்சக்தி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பாஜக அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டாவது முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தியிருந்த அமைச்சர் மெக்வால், “கொரோனாவை எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும் அப்பளம் என அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் இந்த அப்பளத்தை பயன்படுத்துமாறு சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்று கொரோனாவை குணப்படுத்தும் மாட்டுக் கோமியம், அப்பளம் என பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: நேபாளத்தின் அயோத்தியாபுரி தான் ராமர் பிறந்த இடம்; உறுதியாகச் சொல்லும் பிரதமர் ஒலி