சென்னை பூவிருந்தவல்லி எம்ஜிஆர் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதன் சுருக்கம் வருமாறு 
ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு எஸ்டேட் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு கொள்ளை சம்பவத்தை கூலிப்படையினர் தான் செய்தனர்.
 
ஏற்கனவே, அந்த குடும்பத்தினர் (சசிகலா குடும்பத்தினர்) நிறைய பிரச்னைகளை உண்டாக்குகின்றனர். அப்படி இருக்கையில், கொடநாடு விஷயத்தில் ஆதாரம் இருந்தால் அவர்கள் எங்களை சும்மா விடுவார்களா..
தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரின் பேட்டி
விஷயத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறப்பட்டு வருகிறது.
 
கொள்ளை சம்பவம் எப்படி செய்தோம் என்பதை தெரிவித்த கூலிப்படையினர் மீது கேரளாவில் வழக்குகள் உள்ளன.
இப்படியே பேசிய வந்த எட்ப்பாடி பழனிசாமி தனது நிதானத்தை இழந்து கொடநாடு விஷயத்தில் என்னை தொடர்புபடுத்துவது, கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோபிளேன் ஓட்டுதுனு சொல்லுவாங்களாம் என்பது போல் உள்ளது” என்றார்.