இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதைக்குறிப்பிட்டு கேம் வீடியோவை அது தாக்குதல் என்ற விஷம செய்தியை பரப்பியவர்களின் குட்டு வெளிப்பட்டு உள்ளது
 
இந்த வீடியோ ஒரு ‘வீடியோ கேம்’-ன் வீடியோ ஆகும். 2015ஆம் ஆண்டு வெளிவந்த அந்த வீடியோ கேம்மின் பெயர் ‘ஆர்மா 2’. தாக்குதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த அந்த கேமின், ஒரு தாக்குதல் வீடியோ காட்சி தற்போது வைரலாக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது எனக்குறிப்பிட்டு, இந்த கேம் வீடியோவை போலி போட்டாஷாப் பரப்பும் இந்துத்வா அமைப்பினர் பரப்பி வருகின்றனர்.
 
அதில் ஒரு பயங்கரவாத முகாமை, விமானப்படை குறிப்பதும், அதிலிருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடும் நிலையில் குண்டு வீசப்பட்டு மொத்தமாக அழிக்கப்படுவதும் பதிவாகியுள்ளது.
 
முன்னதாக, புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 40 இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இதில், புல்வாமாவில் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள் தகர்த்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது
 
இந்தியாவின் ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாலகோட் பகுதியில் அதிகாலை தாக்குதலை நடத்தியது.
 
இந்தத் தாக்குதல் சுமார் 8 நிமிடம் நீடித்தது. இதேபோல் முஷாபரா பாத் பகுதியிலும் சுமார் 7 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் சகோட்டி பகுதியில் அதிகாலை சுமார் 6 நிமிடம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது என இந்திய தரப்பின் செய்தியை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது