கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவ யுனிசெப் நிறுவனத்துக்கு 1 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளார் இளம் பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்.

ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது பெண்ணான கிரெட்டா துன்பெர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தனது பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு விழிப்புணர்வு பயணங்கள் செய்திருக்கிறார் கிரெட்டா.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளார் கிரெட்டா. இதுகுறித்துக் கூறும்போது, “பருவநிலை மாற்ற பிரச்சினையைப் போல, கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் குழந்தைகளன் உரிமை சம்பந்தப்பட்டதுதான்.

மேலும் வாசிக்க: இந்தியாவில் 7,000 மருத்துவப் பணியாளர்களுக்கு நேசக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்

தற்போது மட்டுமின்றி நீண்ட காலத்துக்கு இந்த வைரஸ் எல்லா குழந்தைகளையும் பாதிக்கும். இதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள்தான்.

குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி, அவர்கள் சுகாதாரத்துடன் இருக்கவும் கல்வியைத் தொடரவும் யுனிசெப் அமைப்பு பணியாற்றி வருகிறது. அனைவரும் அவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கிரெட்ட துன்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.