குடியரசு தினம், ராணுவ தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்துள்ள ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின அணி வகுப்பும், ஜனவரி 15 ஆம் தேதி ராணுவ அணிவகுப்பும் டெல்லியில் நடத்தப்படும். இந்தாண்டு குடியரசு தின விழா மற்றும் ராணுவ தின அணிவகுப்பும் நடைபெற இருக்கிறது.

இதற்காக சுமார் 2500 ராணுவ வீரர்கள் தலைநகர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி வந்த வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

சோதனைகளின் முடிவில், 150 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், அறிகுறிகள் இல்லாததால், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொலைபேசியில் வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்- தெற்கு ரயில்வே எச்சரிக்கை