தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் மட்டும் கமல் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார்.

அவ்வாறு இன்று பேசியபோது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எனவும் அவர் தான் எனக்கு ஹீரோ, ஆனால் கிரிக்கெட் என் மனதை எங்கோ இழுத்து செல்கிறது. அதனால் அதை பார்பதை நிறுத்திவிட்டேன் என்றார்.

மேலும் இதுபோன்ற பொழுதுபோக்குகளினால் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படுகிறது என்றார். இவரது இந்த கருத்தினால் கொதித்து எழுந்த கிரிக்கெட் ரசிகர்கள் ‘அப்போ பிக்பாஸ் மட்டும் என்னதான்?’ என பயங்கரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கோபத்துடன் கோர்ட்டை கழற்றி உதறிப் போட்டதை, இந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ‘நடிகர்’ கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது சல்மான்கானை நகலெடுக்கும் அவசியம் எல்லாம் கமலுக்கு நேர்ந்திருக்காது என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் குமறுகிறார்கள்

மேலும் பிக்பாஸ் சீசன்-1ஐ போல சீசன்-2 மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.