தேனாம்பேட்டை போக்குவரத்து காவலர் தர்மராஜன் என்பவர், விடுமுறை கிடைக்காத விரக்தியை வாக்கி டாக்கி மூலம் வெளிப்படுத்தினார்.
 
இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கடந்த 21-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த தர்மராஜை துரத்திப் பிடித்து விபத்தில் சிக்க வைத்தார்.
இதன் காரணமாக ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
 
இந்த நிலையில், ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மராஜின் மனைவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.