தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலர் தினமான நேற்று நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியுள்ளார்.

இதே போன்று நடிகை சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சாயிஷாவின் அம்மா ஷகீன் அஹ்மீத் கூறுகையில், ஆர்யா தங்கள் வீட்டிற்கு மருமகனாக வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வரும் மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் ஆர்யா – சாயிஷா திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.