காஞ்சிபுரத்தில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால் வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி சிறுமி ஆட்டோ ஓட்டுநருடன் சென்றுள்ளார். அந்த சிறுமியை ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்று மேலும் 2 ஆட்டோ ஓட்டுநர்களை வரவளைத்துள்ளனர்.

பின்னர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜா மற்றும் தேவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.