சமீபத்தில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடைவிதித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போதைய இளைஞர்களுக்கு இணையதளம் தான் எல்லாமே என்று இருக்கும் பட்சத்தில் செல்போனுக்கு தடை விதித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனி வகைகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. பாஜக கட்சி ஆட்சி மோடி அமைச்சகத்தின் தற்போதைய உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மானவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளை கல்லூரி வளாகத்திற்குள் விற்க தடை விதித்துள்ளது.

மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொறுக்கு தீனி உணவுகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுவதாகவும், உண்ணும் உணவே மருந்தாகும் என்றும் தெரிவித்துள்ளது. உடல் எடையை கூட்டக்கூடிய, உடல்நலத்தை கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் இது போன்ற நொறுக்கு தீனிகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தக்கோரி பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழகமும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு நுகர்வு  உணவு வணிக தொழில்துறையையும் மிகவும் பாதிக்கும் என்று தொழில் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்தார்.