தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து, இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பவர்ஸ்டார் சீனிவாசன், “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் இணைந்து விட்டேன். இந்த கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே என்றும், இந்த கட்சியின் மாநில நிர்வாகியாக தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், அதிமுக, திமுக ஆகிய இரண்டு பலமான கட்சிகளை மக்கள் துணையோடு துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார்.

மேலும் தன்மீதுள்ள வழக்குகள் தான் தேர்தலில் போட்டியிட தடையாக இருக்காது என்றும் தென்சென்னை தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் தொண்டாற்றுவேன் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

இதற்கு முன் பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழக பாஜக கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.