மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்டிருந்த வழக்கில், 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15%, மருத்துவ மேற்படிப்பு பிரிவில் 50%, மேலும் சிறப்பு படிப்பு எனும் MCHDM என்ற பிரிவுக்கு 100 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு அனைத்து மாநிலங்களும் அளிப்பது வழக்கம்.

இதில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான இடங்கள் நிரப்பப் படவில்லை என அண்மை காலமாக தமிழகத்தில் இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்தன.

மேலும் வாசிக்க: மருத்துவ படிப்புக்கான 50% இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

இந்நிலையில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி திமுக, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பதிலளிக்ககே கூறி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று (ஜூன்.19) பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.