ஒன்றிய அரசின் நிபந்தனை காரணமாகவே தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு- அமைச்சர் கே.என்.நேரு

வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் காரணமாகவே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசின் நிதி ஆணையம் … Continue reading ஒன்றிய அரசின் நிபந்தனை காரணமாகவே தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு- அமைச்சர் கே.என்.நேரு