ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ரஜினியை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் தனக்கு வாய்ப்பு தராததால் முருகதாஸ் மீது நடிகை கீர்த்தி சுரேஷ் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சர்கார்’. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் அது தற்போது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிக்காக மூன்று கதைகளை தாயார் செய்ததாகவும், அதில் இரண்டை நிராகரித்து விட்டு மூன்றாவது கதையை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன. அதனால் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சர்கார் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ரஜினிக்கான கதையில் நீங்கள் நடிக்கிறீர்கள் என கீர்த்தி சுரேஷிடம் வாக்குறுதி கொடுத்திருந்ததாகவும், தற்போது அப்படத்தில் தனக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.